பனை ஓலைப்பெட்டியின் மகத்துவம்

பனை ஓலைப்பெட்டியின் மகத்துவம் 

🌴 உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நம் பனை ஓலை பெட்டிகள் நாகரீகத்தின் வளர்ச்சியால் அழிந்து போய்விட்டன.

🌴 நம் அம்மா காலத்தில் எல்லாம் பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறம் ஆகியவற்றிற்கு பயங்கரமான வரவேற்பு இருந்தது. அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது.

🌴 ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

🌴 இதனால் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

🌴 அதேபோல் அந்த காலத்தில், கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.

🌴 இதன் பயன்பாடு அதிக அளவில் இருந்ததால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது. இதற்காகவே பனை மரங்கள் கூட வளர்க்கப்பட்டன.

🌴 பனை ஓலைகள் மூலம் முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகள் தயாரித்து பயன்படுத்தப்பட்டன.

🌴 திருவிழாக் காலங்களில் உறவினர்கள், நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைகளையும் பனை ஓலைப் பெட்டிகளில் தான் வைத்திருப்பார்கள்.

🌴 பு வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தைப் பெற்றது.

🌴 ஆனால் காலத்தின் மாற்றமாக பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிக எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். இவற்றின் வருகை பனை ஓலைப் பெட்டிகளை ஓரம் கட்டி விட்டது.

🌴 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சு டான பண்டங்களை எடுத்துச் செல்லும்பொழுது அதில் வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்கள் விரைவில் கெட்டுப் போய்விடும்.

🌴 ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் தின்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது.

🌴 பனைமரங்களின் வீழ்ச்சியும், பிளாஸ்டிக் பொருட்களின் எழுச்சியும் தான் இன்று பனை ஓலை பெட்டிகள் அழிவதற்கு காரணமாக அமைந்தன.

🌴 பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் பனை ஓலைப் பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்கலாம், உடல் நலத்தையும் காக்கலாம்.

Comments

Popular posts from this blog

வறட்சியில் வளம் தரும் கால்நடைத் தீவனம் வேலி மசால்

பசு பற்றி 50 தகவல்கள்

மா சாகுபடி இயறக்கை வழி விவசாய முறையில் மா முக்கனிகளில் ஒன்று